\
இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை... மத போதகர் கைது

இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை... மத போதகர் கைது

இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை... மத போதகர் கைது
Published on

22 வயது இளம் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த இடுக்கி மதபோதகர் கைது செய்யப்பட்டார். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி கல்லார் குட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர், உடல்நலக் குறைவான தனது தாயரை அழைத்துக் கொண்டு, அடிமாலி நகரில் உள்ள பாலக்காடான் ஆயுர்வேதா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இந்த ஆயுர்வேத மருத்துவமனையை நடத்தி வரும், கிறிஸ்தவ தேவாலய அருட்தந்தை ரெஜி என்பவர், சிகிச்சைக்கு வந்த தாயாருடன் துணைக்கு வந்த 22 வயது மகளை மருத்துவமனையின் ஒரு அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடிமாலி போலீசார் அருட்தந்தை ரெஜியை கைது செய்து தொடுபுழா சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com