\
என்.ஐ.ஏ. புதிய இயக்குனராக ஒய்.சி.மோடி நியமனம்

என்.ஐ.ஏ. புதிய இயக்குனராக ஒய்.சி.மோடி நியமனம்

என்.ஐ.ஏ. புதிய இயக்குனராக ஒய்.சி.மோடி நியமனம்
Published on

என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குனராக ஒய்.சி.மோடியை நியமிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தீவிரவாத ஊடுருவல், தாக்குதல்கள், பதுங்கியிருக்கும் ஸ்லீப்பர்செல்கள் கண்டறிவது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குனராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒய்.சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் ஒய்.சி. மோடியும் ஒருவர் ஆவார். மேலும் இவர் சிபிஐயில் கூடுதல் இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com