‘யாஸ்’ புயல் - நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

‘யாஸ்’ புயல் - நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

‘யாஸ்’ புயல் - நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

‘யாஸ்’ புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய கிழக்கும் வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயலாக மாற இருக்கிறது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் வரும் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. மணிக்கு 165 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘யாஸ்’ புயல் குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி பாதுகாப்பான இடங்களுக்கு அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com