“சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும்” - மாவோயிஸ்ட்டுகள் போஸ்டர்

“சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும்” - மாவோயிஸ்ட்டுகள் போஸ்டர்

“சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும்” - மாவோயிஸ்ட்டுகள் போஸ்டர்
Published on

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் பெண்களை தடை செய்யும் இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உதகை வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அன்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது. இந்நிலையில் மண்டல பூஜைக்காக நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் மன்னார் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் பெண்களை தடை செய்யும் இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com