மாதவிடாயின் முதல்நாள் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை: பிரபல நிறுவனம் அறிவிப்பு

மாதவிடாயின் முதல்நாள் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை: பிரபல நிறுவனம் அறிவிப்பு
மாதவிடாயின் முதல்நாள் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை: பிரபல நிறுவனம் அறிவிப்பு

கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான மாத்ருபூமி, அந்நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 75 பெண்களுக்கு மாதவிடாய் முதல் நாளன்று விடுமுறை என அறிவித்துள்ளது.

மாதவிடாய் விடுமுறை குறித்து அந்நிறுவனத்தின் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “நம் நாட்டில் மாதவிடாய் கோளாறு என்பது பெண்களின் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்களிடம் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே பெண்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, ஆதரவு தரும் விதமாக நாங்கள் இம்முடிவை மேற்கொண்டோம். மாதவிடாய் குறித்து பொதுவாக நிலவும் தயக்கத்தை அகற்ற நினைத்தோம். எங்களுக்காக இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் எங்கள் பெண் ஊழியர்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறோம்” என்றார்.

இதற்கு முன்பாக மும்பையைச் சேர்ந்த பிரபல ஊடக நிறுவனமான ‘கல்சர் மெஷின்’தான் முதன்முதலில் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com