கத்தியை கையில் எடுப்பதா?: ஆணுறுப்பை வெட்டிய பெண்ணுக்கு சசி தரூர் அட்வைஸ்!

கத்தியை கையில் எடுப்பதா?: ஆணுறுப்பை வெட்டிய பெண்ணுக்கு சசி தரூர் அட்வைஸ்!

கத்தியை கையில் எடுப்பதா?: ஆணுறுப்பை வெட்டிய பெண்ணுக்கு சசி தரூர் அட்வைஸ்!

கேரளாவில் சாமியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், அவரின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், இச்செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் தவறு. அந்தப் பெண் கத்தியை எடுப்பதற்கு பதிலாக போலீசில் புகார் தெரிவித்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில், மாணவி சாமியாரின் உறுப்பை துண்டித்ததற்கு பதிலாக காவல்துறையிடம் சென்று இருக்க வேண்டும். இதுபோன்ற விரைவான தீர்ப்பினால் மனநிறைவு இருக்கலாம்; ஆனால் சட்டத்தை கையில் எடுப்பதைவிட மாணவி காவல்துறையிடம் பிரச்னையை எடுத்துச் சென்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். என்னுடைய அனுதாபங்கள் மாணவியுடன்தான் உள்ளது. அதிகமான மக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் நீதி கிடைக்க வேண்டிய ஒரு சமூகமானது நமக்கு அவசியம்; ஒவ்வொரு தனிமனிதனும் கத்தியை கையில் எடுக்க கூடாது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com