பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இளம்பெண் தீக்குளிப்பு

பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இளம்பெண் தீக்குளிப்பு
பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இளம்பெண் தீக்குளிப்பு

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த அந்த பெண் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தீக்குளித்தார். ஹசன்கஞ்ச் நகரில் உள்ள காவல்நிலையத்தில் தீக்காயங்களுடன் பெண் நுழைந்ததை கண்டு காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், அந்தப் பெண் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் 70 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் முன்ஜாமீன் பெற்று விட்டனர் என்றும் அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கும், அந்த பெண்ணுக்கும் 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது என்றும் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் நிர்ப்பந்தம் செய்தை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லை என கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் தெரிவித்தார். அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற முயன்ற போது பேசும் நிலையில் அவர் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com