புல்வாமாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பெண் உயிரிழப்பு

புல்வாமாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பெண் உயிரிழப்பு

புல்வாமாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பெண் உயிரிழப்பு
Published on

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிகினா பானு என்ற பெண் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றொரு நபர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளனர். 

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் கணவர் ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் 101 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் குறிப்பாக புல்வாமா, ஷோபியன், குல்கம் மற்றும் அனந்தனாக் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com