ஆந்திராவில் பெண் ஒருவரை கிராமத் தலைவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
அனந்தப்பூர் மாவட்டம் ஜல்லிப்பள்ளி கிராமத்தில் இரு தினங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது வீட்டின் முன் தண்ணீர்த் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அவரை கிராமத்தின் தலைவர் தாக்குவதும் செல்போனில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காட்சி, ஊடகங்களில் வெளியானதையடுத்து, கிராமத்தின் தலைவரான நாகராஜை கைது செய்த காவல்துறையினர், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.