ஜம்முவில் ஆட்சி அமைக்கிறதா காங்கிரஸ் ?

ஜம்முவில் ஆட்சி அமைக்கிறதா காங்கிரஸ் ?

ஜம்முவில் ஆட்சி அமைக்கிறதா காங்கிரஸ் ?
Published on

பிடிபிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் காஷ்மீரில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை. ஆனால் பிடிபிக்கு 28 இடங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவை பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும். 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்ஃதி தனது இராஜிநாமாவை ஆளுநர் என்.என்.வோராவிடம் அளித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 5 மணிக்கு பேச உள்ளார். இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் , பாஜக தனது தவறை ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் இந்த கூட்டணி நீண்ட காலம் செல்லாது என்று முன்பே சொன்னதாகவும் தெரிவித்தார். 

இது போன்ற சூழலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயலுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பிடிபி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் கேள்விக்கு இடமே இல்லை என்றும் பிடிபியுடன் சேர்ந்து எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com