சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக 2 நாட்கள் ஒதுக்கப்படும் - கேரள அரசு

சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக 2 நாட்கள் ஒதுக்கப்படும் - கேரள அரசு

சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக 2 நாட்கள் ஒதுக்கப்படும் - கேரள அரசு
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களுக்காக மட்டும் இரண்டு நாட்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என கேரள உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி
உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் தொடக்கத்தில் பெண்கள்
சிலர் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது வருகை தந்தனர். அவர்களை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பலர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆயிக்கணக்கானோர் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட
மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவற்றின் மீது ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என
உச்சநீதிமன்றம்  கூறியது. 

மேலும் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டது. மேலும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தை திருவாங்கூர் தேவஸம் போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கேரள உயர்நீதிமன்றத்தில் 4 பெண்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களது பாதுகாப்பு அளிக்க கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென அவர்கள் தங்கள் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு நிச்சயம் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், ஏதேனும் இரண்டு நாட்கள் பெண்களுக்கு மட்டும் தனியாக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com