திருச்சூர்: காட்டு யானை தாக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்

திருச்சூர்: காட்டு யானை தாக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
திருச்சூர்: காட்டு யானை தாக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்

கேரளாவில் அதிரப்பள்ளி மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள மலா பகுதியைச் சேர்ந்த நபர் அதிரப்பள்ளி சுற்றுவட்டாரத்திலுள்ள கன்னம்குழி என்ற இடத்திற்கு உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கிற்காக தனது மகளுடன் சென்றிருக்கிறார். திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் அவர் தனது மகள் மற்றும் உறவினர் ஒருவருடன் சாலக்குடி - அதிரப்பள்ளி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று அவர்களை நோக்கி வருவதை கவனித்திருக்கின்றனர். உடனே பைக்கை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றிருக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 5 வயது சிறுமி கீழே விழுந்திருக்கிறார். அவரை தூக்க முயல்வதற்குள் அங்குவந்த யானை, சிறுமியை மிதித்துக்கொன்றது.

கண் முன்னே மகள் கொல்லப்படுவதைப் பார்த்து பரிதவித்த சிறுமியின் தந்தை யானையின் கால்பிடியிலிருந்து மகளை காப்பாற்ற முயன்றதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்து ஓட முயன்ற உறவினரையும் யானை விடாமல் தாக்கியிருக்கிறது. தற்போது படுகாயமடைந்த இருவரும் சாலக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com