புதிய சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லா : யார் இவர் ?

புதிய சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லா : யார் இவர் ?
புதிய சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லா : யார் இவர் ?

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால் மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பதவி ஏற்றார். பின்னர் அவரை தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவையும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியது. அதனையடுத்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிபிஐ புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷி குமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சுக்லா, 1983- ஆம் ஆண்டின் மத்திய பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சிக்கிம் மாநிலத்தின் காங்டாக்கில் சிறப்பு உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றியவர். 

மத்திய பிரதேசத்தின் காவல்துறை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தான் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து, அம்மாநில அரசு அவரை நீக்கியது. இந்தச் சூழலில், மத்திய அரசு அவரை சிபிஐ இயக்குநராக நியமனம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com