சபரிமலை கோவில் நடை திறப்பு ! அடுத்து எப்போது ?

சபரிமலை கோவில் நடை திறப்பு ! அடுத்து எப்போது ?

சபரிமலை கோவில் நடை திறப்பு ! அடுத்து எப்போது ?
Published on

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதப் பூஜை முடிந்து இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு ஐப்பசி மாதம் முதல் நாளான கடந்த 17 ஆம் தேதி ஐயப்பன் கோவிலின் சந்நிதானத்தின் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதனையடுத்து நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பெண்கள் சபரிமலை கோயில் சந்நிதானத்துக்கு செல்ல முயன்றதால் பரபரப்பாகவே காணப்பட்டது. நிலக்கல்லில் போலீஸ், பக்தர்களிடையே கல்வீச்சு, அடிதடி என ரணகளமானது. இதுவரை 9 பேர் சபரிமலைக்கு வந்ததாகவும் யாரும் கடைசிவரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பலரும், கோயிலின் நடைப்பந்தல் வரை சென்று திரும்பியுள்ளனர். ஆனால், யாராலும் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று இரவு 10 மணிக்கு சாத்தப்படும். பின்பு, நாளையில் இருந்து பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். இதன் பின்பு ஐயப்பன் கோவிலின் நடை பிரசித்தப் பெற்ற மண்டலப் பூஜைக்காக நவம்பர் மாதம் 16 ஆம் தேதி (கார்த்திகை மாதம்) திறக்கப்படும். இந்தச் நாளில்தான் ஐயப்பன் பக்தர்களை அனைவரும் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, அத்துடன் மண்டலப் பூஜைகள் முடிவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி இரவு 10 மணிக்குதான் நடை சாத்தப்படும்.

பின்பு மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். இதில் உலகப் புகழ்ப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும். இதற்கடுத்து மகர விளக்கு பூஜை நிறைவடைந்து ஜனவரி 20 ஆம் தேதி கோவிலின் நடை சாத்தப்படும். இதன் பின்பு மாதாந்திர பூஜைக்காக 5 நாட்கள் மட்டுமே திறக்கப்படும். இதற்கு நடுவே கேரள மாநிலத்தின் விஷு வருட பிறப்பக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை திறக்கப்படும். அப்போது பெரும்பாலான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com