மேற்கு வங்க வன்முறை; உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த ஜே.பி நட்டா!

மேற்கு வங்க வன்முறை; உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த ஜே.பி நட்டா!
மேற்கு வங்க வன்முறை; உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த ஜே.பி நட்டா!

மேற்குவங்க மாநிலத்தில் பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பத்தினரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 294 இடங்கள் கொண்ட மேற்கு வங்கத்தில் 213 தொகுதிகளை தனிப்பெரும்பான்மையுடன் பிடித்து மூன்றாவது முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக 77 இடங்களைப் பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பாஜகவினரும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நேற்று ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்ததாககவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

பாஜக தலைவர் ஜே.பி நட்டா இதனைக் கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதோடு, இன்று வன்முறையில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இதுதான் உங்கள் கட்சியின் ஜனநாயகமா மம்தா பானர்ஜி? தேர்தலில் வென்றவுடன் உங்கள் கட்சியினர் என்ன செய்துள்ளனர் என்பதைப் பாருங்கள். சமூக வலைதளங்களில் இந்த சம்பவங்கள் அனைத்தும் போலியானவை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கூறுகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பம் எப்படி அழுகிறார்கள் என்பதை பாருங்கள். இந்த தேசத்திடம் உண்மையைச் சொல்ல நான் ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com