மேற்கு வங்கம்: பாஜக மூத்த தலைவருக்கு 2 நாட்கள் பரப்புரை செய்ய தடை!

மேற்கு வங்கம்: பாஜக மூத்த தலைவருக்கு 2 நாட்கள் பரப்புரை செய்ய தடை!

மேற்கு வங்கம்: பாஜக மூத்த தலைவருக்கு 2 நாட்கள் பரப்புரை செய்ய தடை!
Published on

மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா 2 நாட்கள் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்க தேர்தல் பரப்புரையில் மதரீதியாக வாக்கு சேகரிப்பில் மம்தா பானர்ஜி ஈடுபட்டது நடத்தை விதி மீறல் என்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 24 மணி நேரம் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி இன்று இரவு 8 மணி வரை ஒருநாள் பரப்புரை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து கொல்கத்தா காந்தி சிலை முன்பாக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா, கூச்பெஹாரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேருக்கு பதிலாக 8 பேரையாவது சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையில் சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் 2 நாட்கள் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அதன்படி வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 12மணி வரை ராகுல் சின்ஹா தேர்தல் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com