‘கர்ணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை’

‘கர்ணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை’
‘கர்ணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை’

நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க தமிழக காவல்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனுக்கு, மேற்குவங்க டிஜிபி சுரஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதி கர்ணன் தமிழகத்தில் தான் தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீதிபதி கர்ணனை தேடும் பணி நடைபெற்றதாகவும், இருப்பினும் அவரை கண்டறிய இயலவில்லை எனவும் சுரஜித் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் மீது அவதூறு பரப்பியதாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க ஒத்துழைக்குமாறு தமிழக காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com