கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிபோதும் அதன் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் அவர் முதல்வராக பதவியேற்ற நிலையில் 6 மாதத்திற்குள் பேரவை உறுப்பினராக வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் வென்ற திரிணமூல் உறுப்பினர் ராஜினாமா செய்த நிலையில் அந்த இடத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டார். இதில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் கடந்த 30ஆம் தேதி நடந்த தேர்தலில் 53.32% வாக்குகள் பதிவாகின.