மேற்கு வங்கத்தில் இன்று இடைத்தேர்தல்: 72 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் குவிப்பு

மேற்கு வங்கத்தில் இன்று இடைத்தேர்தல்: 72 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் குவிப்பு
மேற்கு வங்கத்தில் இன்று இடைத்தேர்தல்: 72 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் குவிப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நந்தி கிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியுற்றபோதும் முதலமைச்சராக பதவியேற்றார். 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இதற்கு ஏதுவாக பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேப், தன் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்கன்ஜ் ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பவானிபூரில் 97 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 287 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளுக்காக 72 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் மட்டும் 35 கம்பெனி பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தூரம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைப் போல, அசாம், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஆந்திரா, தெலங்கானா, மிசோரம், நாகாலாந்து, அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மொத்தம் 30 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com