வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் உள்ளூர் காவல் துறையினருடன் மத்திய துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் பவானிபூரை தவிர இடைத்தேர்தல் நடந்த சம்சர்கன்ஞ், ஜாங்கிபூர் தொகுதிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. காலை 11 மணிக்குள் தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.