திரிணமூல் காங்கிரஸால் புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என இந்திய மக்கள் கனவு காண்பதாகவும் அக்கட்டுரையில் மம்தா தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்திற்கேற்ப பாரதிய ஜனதாவுக்கு எதிரான சக்திகளை ஓரணியில் திரட்ட தங்கள் கட்சி முனைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிரணிக்கு தலைமை தாங்குவது தங்கள் விருப்பம் இல்லை என்று கூறியுள்ள மம்தா, அதே நேரம் காங்கிரஸ் கட்சி தற்போதைய யதார்த்த சூழலை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் எதிரணியை வலிமையானதாக மாற்ற முடியும் என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.