கேரளா: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்

கேரளா: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்
கேரளா: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்

கேரளாவில் இந்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு குறையாத நிலையில் ஜிகா வைரஸின் தாக்கமும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களாக தினசரி கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்துக்கு கீழ் குறையாத நிலை உள்ளது. மேலும் ஜிகா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஏற்கெனவே கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அதே நடவடிக்கையை இந்த வாரமும் நீடிப்பதாக அறிவித்துள்ள கேரள அரசு, வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளிலும் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com