“அபிநந்தனை விரைவில் இந்தியாவில் பார்ப்போம்” - காங்கிரஸ் நம்பிக்கை

“அபிநந்தனை விரைவில் இந்தியாவில் பார்ப்போம்” - காங்கிரஸ் நம்பிக்கை

“அபிநந்தனை விரைவில் இந்தியாவில் பார்ப்போம்” - காங்கிரஸ் நம்பிக்கை
Published on

இந்தியாவில் விரைவில் அபிநந்தனை பார்ப்போம் என நம்புவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை  ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.

இதையடுத்து நேற்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானியை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.  இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “காணாமல் போன இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமானைப் பற்றி அரசாங்கம் இன்று தகவல் தெரிவிக்கும் என நம்புகிறோம். இந்தியாவில் அவரை விரைவில் பார்ப்போம் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com