\
Wayanad Landslides: From 1984 to the 2024 Disast
கேரளா நிலச்சரிவுPti

வயநாட்டைத் தொடர்ந்து உலுக்கும் பேரிடர்கள்.. 1984 முதல் 2024 வரை; நிலச்சரிவுகளின் பின்னணி!

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாயமான 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
Published on

கேரளத்தின் அழகிய மலைப் பிரதேசமான வயநாடு, இயற்கைப் பேரிடர்களாலும் நிலச்சரிவுகளாலும் தொடர்ந்து கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. 1984ஆம் ஆண்டு முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடங்கி, 1992 கப்பிக்கல், 2007 வளம்தோடு, 2018இல் ஏற்பட்ட கேரளப் பெருவெள்ளம், மற்றும் 2019 புதுமலா நிலச்சரிவு என வயநாட்டின் துயர வரலாறு நீள்கிறது.

கேரள நிலச்சரிவு 2024
கேரள நிலச்சரிவு 2024X

இதில் உச்சக்கட்டமாக, கடந்த 2024ஆம் ஆண்டு சூரல்மலா மற்றும் முண்டக்கையில் ஏற்பட்ட மிக மோசமான இரட்டை நிலச்சரிவில் சிக்கி 298 பேர் உயிரிழந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான வயநாட்டில் மனிதர்களின் அதீத ஊடுருவல், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றமே இந்தத் தொடர் நிலச்சரிவுகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு பேரிடரும், இயற்கையைப் பாதுகாக்க நாம் தவறிவிட்டால் நேரிடும் பேராபத்தை உணர்த்தும் எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது.

Wayanad Landslides: From 1984 to the 2024 Disast
வெளிப்படைத் தன்மையின் அடையாளம்.. வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com