சிறையிலிருந்து வெளியே சென்றார் சசிகலா? புதிய வீடியோ வெளியீடு

சிறையிலிருந்து வெளியே சென்றார் சசிகலா? புதிய வீடியோ வெளியீடு
சிறையிலிருந்து வெளியே சென்றார் சசிகலா? புதிய வீடியோ வெளியீடு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறையிலிருந்து வெளியே சென்றதற்கான ஆதாரங்களை, கர்நாடக மாநில சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, ஊழல் தடுப்புப் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பான பிரத்யேக காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில், சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில், சிறையின் பிரதான வாயிலுக்குள் நுழைவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் கையில் பை ஒன்றை வைத்துள்ளனர். 

இந்தக் காட்சிகளின் மூலம் இருவரும், காவல்துறை உயரதிகாரிகளின் அனுமதியோடு வெளியே சென்று வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபாவைத் தொடர்பு கொண்ட போது, இந்த ஆதாரத்தை ஊழல் தடுப்புப் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நடந்தவை குறித்து விசாரிக்க அம்மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையிலான குழுவிடமும் ரூபா இந்த ஆதாரங்களை அளித்துள்ளார். இந்த வீடியோ ஆதாரங்கள் அனைத்தும் பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்புக் கேமரா பதிவுகளிலிருந்து பெறப்பட்டதாக ரூபா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com