தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மன் செயல்படுவார்.. பிசிசிஐ அறிவிப்பு.

தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மன் செயல்படுவார்.. பிசிசிஐ அறிவிப்பு.
தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மன் செயல்படுவார்.. பிசிசிஐ அறிவிப்பு.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்டு 18 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர் கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்நிலையில் நடைபெற இருக்கும் ஜிம்பாபேவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல்-இல் ஹைதராபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் விவிஎஸ் லக்‌ஷ்மன் தற்காலிக தலைமை பயிற்சியாளராக இந்திய அணிக்கு செயல்படுவார் என்று பிசிசிஐ நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தெரிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, மேலும் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கும் ஜிம்பாபே தொடருக்கும் இடையே சிறிய இடைவெளி தான் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com