மேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
மேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்குவங்கத்தில் 4-ஆவது கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் 3 கட்டங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 4ஆவது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில் மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் வரும் 29-ஆம் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. ஏப்ரல் 29ஆம் தேதி 5 மாநில தேர்தல்களும் முழுமையும் முடிவுக்கு வருவதால் அன்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் வெளியாக உள்ளன. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com