\
ஊரடங்கு நேரம்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பார்வை குறைபாடுள்ள பெண்

ஊரடங்கு நேரம்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பார்வை குறைபாடுள்ள பெண்

ஊரடங்கு நேரம்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பார்வை குறைபாடுள்ள பெண்
Published on

ஊரடங்கு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பார்வை குறைபாடுள்ள பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 53 வயதான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். வங்கி அதிகாரியான அந்தப் பெண்ணுக்கு பார்வை குறைபாடு எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது கணவரும், குடும்பத்தினரும் ராஜஸ்தானில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் அப்பெண் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணின் வீட்டில் நுழைந்த மர்ம நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள காவல் அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உரிய விசாரணையை தொடங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com