3 எழுத்தில் முத்தான பெயரை மகளுக்கு சூட்டிய கோலி – அனுஷ்கா

3 எழுத்தில் முத்தான பெயரை மகளுக்கு சூட்டிய கோலி – அனுஷ்கா

3 எழுத்தில் முத்தான பெயரை மகளுக்கு சூட்டிய கோலி – அனுஷ்கா
Published on

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் தங்கள் மகளுக்கு வாமிகா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்‌டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு, கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில்  பெண் குழந்தை பிறந்தது. தனது முதல் குழந்தையின் பிறப்பை ட்விட்டரில் கோலி அறிவித்தார்.

அதோடு அனுஷ்கா மற்றும் கோலி இருவருமே தங்கள் மகள் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் பகிர வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொண்டனர். அதோடு தங்களது தனிப்பட்ட வாழ்வை மதிக்கும்படியும் ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று கோலி - அனுஷ்கா தம்பதியினர் தங்கள் மகளுக்கு வாமிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். இருவரும் தங்கள் மகளை கொஞ்சும் புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அப்புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com