சபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ

சபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ
சபரிமலையில் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் மேல்சாந்திகள் - வைரலாகும் வீடியோ

சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புறம் ஆகிய இரு ஆலயங்களின் மேல்சாந்திகள் சபரிமலையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புறம் பகவதி அம்மன் கோயிலில், ஒராண்டு பூஜை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட ஜெயராஜ் போற்றி மற்றும் ரெஜிகுமார் போற்றி ஆகிய இருவரும் புறப்படா சாந்திகளாக ஒராண்டு சபரிமலையில் தங்கி இரு கோயில்களிலும் பூஜை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு தங்கி இருக்கும் இரு மேல்சாந்திகளும் தினசரி பூஜைகள் முடிந்த பிறகு யோகா மற்றும் சம்ஸ்கிருதம் படிப்பதுடன் சபரிமலை வலிய நடைப்பந்தலில் தினசரி நடந்து உடற் பயிற்சி எடுப்பதும் வழக்கம். இந்நிலையில் ஒரு நாள் நடைப்பந்தலில் புலி இறங்கியதை தொடர்ந்து நடை பயிற்சி செய்வதை தவிர்த்த இவர்கள் தங்கும் பகுதியில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

இதை அங்கிருந்த தேவசம் ஊழியர் ஒருவர் ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த பதிவு அதிகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com