10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பள்ளி மாணவர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு தனது ஆசிரியரைச் சுட்டுள்ளார். பள்ளியில் அந்த மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த அந்த மாணவர் இந்த விபரீத சம்பவத்தில் இறங்கி உள்ளார். அந்த மாணவன் ஆசிரியரை நோக்கி மூன்று முறை சுட்டுவிட்டு துப்பாக்கியுடன் அங்கிருந்து ஓடிவிட்டான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆசிரியரை மாணவர் சுடும் அந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கே இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. ஆசிரியர் மாணவரிடம் இருந்து தப்ப முயல்வதும், அங்கிருந்த ஒரு நபர் ஓடிச்சென்று அந்த மாணவரைப் பிடித்ததும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.
இதையும் படிக்க: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொன்ற பாஜக தலைவர் மகன்: உத்தராகாண்டில் பகீர்!