குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிகுறிகள் இல்லாமல் கொரோனா கண்டறியப்பட்டிருப்பதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அத்துடன் வெங்கையா நாயுடு மனைவிக்கு கொரோனா இல்லை என்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.