அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்: திருப்பதியில் வெங்கய்ய நாயுடு பேட்டி

அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்: திருப்பதியில் வெங்கய்ய நாயுடு பேட்டி

அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்: திருப்பதியில் வெங்கய்ய நாயுடு பேட்டி
Published on

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கய்ய நாயுடு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். 

பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் ரேணிகுண்டாவுக்குச் சென்ற வெங்கய்ய நாயுடு, அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு நேற்று சென்றார். அங்கு அவரை சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரத்யும்னா, தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் மற்றும் அதிகாரிகள், பா.ஜ க. வினர் வரவேற்றனர். பின்னர் இன்று காலை சிறப்பு பூஜையில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு, ஏழுமலையானை தரிசனம் செய்தார். இதையடுத்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, துணை ஜனாதிபதி பொறுப்பில், அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னிச்சையாக செயல்படுவேன் என உறுதியளித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இப்போது நான் எந்த கட்சியையும் சாராதவன். அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ஒரிரு நாட்களில் விலகவுள்ளேன். ஏற்கப்போகும் பதவிக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்திற்குட்பட்டு கடமையாற்றுவேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com