ரயில் தடம்புரண்டு 3 பேர் பலி: 9 பேர் படுகாயம்!

ரயில் தடம்புரண்டு 3 பேர் பலி: 9 பேர் படுகாயம்!
ரயில் தடம்புரண்டு 3 பேர் பலி: 9 பேர் படுகாயம்!

விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயமடைந்தனர். 

கோவாவில் உள்ள வாஸ்கோடகாமாவில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு வாஸ்கோடகாமா-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயில் இன்று அதிகாலை, உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள மானிக்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது. 13 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 3 பேர் பலியாயினர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதமே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com