கொரோனா அச்சம்: இதய நோயாளி சென்ற ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய குடியிருப்புவாசிகள்!

கொரோனா அச்சம்: இதய நோயாளி சென்ற ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய குடியிருப்புவாசிகள்!
கொரோனா அச்சம்: இதய நோயாளி சென்ற ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய குடியிருப்புவாசிகள்!

இதய நோயாளியை அவசரமாக அழைத்து வந்த ஆம்புலன்ஸை கொரோனா பயத்தால் தடுத்து நிறுத்திய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத்தின் வடோடரா பகுதியின் அல்காபுரி பகுதியில் இதய நோய் தொடர்பான சோதனை நிலையம் உள்ளது. நேற்று இரவு இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அவசரமாக பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட நபரை அல்காபுரி பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

அப்போது ஆம்புலன்ஸ் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் நடு சாலையில் நின்று ஆம்புலன்ஸை செல்ல விடாமல் மறைத்துவிட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆம்புலன்ஸை உள்ளே விட முடியாது எனக் கூறி உள்ளனர். இதய நோயாளி குறித்து கூறியும் அவர்கள் ஆம்புலன்சுக்கு வழி விடவில்லை. இதனை அடுத்து இதய பரிசோதனை நிலைய ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைத்து ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனை நிலைய மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com