தடுப்பூசி பற்றாக்குறை; மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை காணவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

தடுப்பூசி பற்றாக்குறை; மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை காணவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
தடுப்பூசி பற்றாக்குறை; மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை காணவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன் 2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டு்ள்ளது. மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம் ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?” எனத் தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com