லிஃப்டில் 3 நாட்கள் சிக்கித்தவித்த இளம்பெண்: 3 நாட்களுக்குப் பிறகு நேர்ந்த சோகம்!

லிஃப்டிற்குள் 3 நாட்களாக சிக்கித் தவித்த இளம்பெண் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சடலம்
சடலம்கோப்புப் படம்

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஓல்கா லியோன்டிவா. இவருக்கு 6 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர்கள், அப்பகுதியில் உள்ள 9 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேல்தளத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், லியோன்டிவாவை கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் காணவில்லை எனவும், பணிக்குச் சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் 3 நாட்களுக்குப் பின்னர் லியோன்டிவாவை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர். ஜூலை 24ஆம் தேதியன்று லியோன்டிவா 9 மாடி கட்டடத்தில் உள்ள லிஃப்டில் ஏறியுள்ளார். எதிர்பாராதவிதமாக தொழில்நுட்ப கோளாறால் லிஃப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. அதற்குள் அடைபட்ட நிலையில், லியோன்டிவா உதவிக்காகச் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட லியோன்டிவாவால் 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்துள்ளார். அவருடைய ஆறு வயது மகள் உறவினர்களின் பராமரிப்பில் இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சீனாவைச் சேர்ந்த லிஃப்ட் நிறுவனத்தின் மீது போலீஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அது வேலை செய்யும் நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று மின்வெட்டு ஏதும் இல்லை என்பதை மின்சார துறை உறுதி செய்துள்ளது. லிஃப்டில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com