முதல் இரவுக்காக அறைக்குள் சென்ற புதுமண தம்பதி.. மறுநாள் காலை இறந்துகிடந்த துயரம்? நடந்தது என்ன?

புதுமண தம்பதிகள் திருமண நாள் அன்று முதல் இரவுக்காக அறைக்குள் அனுப்பப்பட்ட நிலையில், அடுத்த நாள் இருவரும் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுமண ஜோடி
புதுமண ஜோடிtwitter

உத்தரப்பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் உள்ள கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் யாதவ். 22 வயது நிரம்பிய இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20 வயது) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த மே 30ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தைத் தொடர்ந்து புதுமண தம்பதி வீட்டிற்கு வந்த நிலையில், அன்றிரவு இருவருக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தம்பதி இருவரையும் மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்த உறவினருக்கு, அடுத்த நாள் காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. விடிந்து நீண்டநேரம் ஆகியும் புதுமணத் தம்பதிகள் இருவரும் வெளியே வராததால், உறவினர்கள் கதவைத் தட்டியுள்ளனர். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளே இருவரும் பேச்சுமூச்சின்றி இறந்துகிடந்துள்ளனர். பின்னர், அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வர அவர்கள் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர், அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கையில் இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தம்பதிக்கு முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை. இதுவே மூச்சு திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்காலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜோடி இருவருக்கும் ஒன்றாக இறுதி சடங்கு செய்யப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் தடயவியல் சோதனை நடத்தப்பட்டு, அவர்கள் சாப்பிட்ட உணவுகள் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com