10 சதவீதம் இடஒதுக்கீடு - மகாராஷ்டிராவை தொடர்ந்து உத்தரகாண்ட் ஒப்புதல்

10 சதவீதம் இடஒதுக்கீடு - மகாராஷ்டிராவை தொடர்ந்து உத்தரகாண்ட் ஒப்புதல்
10 சதவீதம் இடஒதுக்கீடு - மகாராஷ்டிராவை தொடர்ந்து உத்தரகாண்ட் ஒப்புதல்

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க உத்தரகாண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  

10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சமீபத்தல் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. 

இதனைத்தொடர்ந்து நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதனையடுத்து, இந்தச் சட்டத்திற்கு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்து வருகின்றன. ஏற்கனவே, உத்தரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட் மாநிலங்கள் இந்த இடஒதுக்கீடு முறைக்கு ஒப்புதல் அளித்திருந்தன. அந்த வரிசையில் கடந்த திங்கட்கிழமை மகாராஷ்டிர அரசும் ஒப்புதல் அளித்தது. 

இந்நிலையில், மற்றொரு பாஜக ஆளும் மாநிலமான முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான உத்தரகாண்ட் அரசு 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை பாஜக ஆளும் 5 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. 

இதனிடையே, 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிராக சமத்துவத்திற்கான இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com