உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி!
உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக தீரத் சிங் ராவத் ஆட்சி செய்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்து அவர், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நன்றாக இருக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. டாக்டர்களின் மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிகையாக இருங்கள். பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார் தீரத் சிங் ராவத். உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்துக்குப் பதில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி தான் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com