உத்தரப் பிரதேசம்: தொடர் கனமழையால் 8 குழந்தைகள் உட்பட 25பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசம்: தொடர் கனமழையால் 8 குழந்தைகள் உட்பட 25பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேசம்: தொடர் கனமழையால் 8 குழந்தைகள் உட்பட 25பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்துபெரும் கனமழைக்கு இதுவரை 8 குழந்தைகள் உட்பட மொத்தமாக 25பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழைக்கு கிட்டத்தட்ட மாநிலத்தின் 9 மாவட்டங்கள் பெரிய பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றன. இந்நிலையில் பெய்து வரும் கனமழையால் 9 மாவட்டத்தில் மொத்தமாக 8 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ள துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கனமழைக்கு பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிகழ்ந்த 11 விதமான அசம்பாவித நிகழ்வுகளால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக லக்னோவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com