உ.பி.யில் கோர விபத்து: லாரியில் பயணம் செய்த 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உ.பி.யில் கோர விபத்து: லாரியில் பயணம் செய்த 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உ.பி.யில் கோர விபத்து: லாரியில் பயணம் செய்த 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் லாரிகள் விபத்துக்குள்ளானதில் 21  தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

ராஜஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற லாரி, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 21 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டுச் சென்ற லாரி உபியின் ஆரையா பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com