22 ஆளில்லா உளவு விமானங்கள்: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

22 ஆளில்லா உளவு விமானங்கள்: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

22 ஆளில்லா உளவு விமானங்கள்: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
Published on

ஆளில்லா உளவு விமானங்களான கார்டியன் ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பணம் செய்த நிலையில் இருநாடுகளும் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர மற்றும் நிலப்பரப்பு எல்லைகளைக் கண்காணிக்கும் பணிக்காக, 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இருக்கும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவிடமிருந்து ஃஎப் 16,  ஃஎப் ஏ 18 ரக போர் விமானங்கள் மற்றும் சி 17 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com