உயிரைப் பறித்த பைக் சாகசம்: அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயர் பலி

உயிரைப் பறித்த பைக் சாகசம்: அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயர் பலி
உயிரைப் பறித்த பைக் சாகசம்: அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயர் பலி

அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக வந்த சாப்ட்வேர் என்ஜினீயர், பைக் சாகசத்தில் ஈடுபட்டு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத் தியுள்ளது. 

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார் பீச்சாரா (45). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், அமெரிக்காவின் டல்லாஸில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக தனது நண்பர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத் வந்திருந்தார். 

இந்நிலையில் ஐதராபாத் அருகிலுள்ள கொடமகுடா அட்வெஞ்சர் ரிசார்ட்டுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார். அங்கு மலைகளின் மீது ஏறி, சாகசம் செய்வதற்காக நான்கு வீல்கள் கொண்ட பைக்குகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஏறி அரவிந்த் குமார், பயிற்சி இல்லாமல் சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது பைக், மேடான பகுதியில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக விக்ராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித் தனர்.

பயிற்சியாளர் இல்லாமல் இந்தச் சாகசத்தில் ஈடுபட்டதால்தான், விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை நடந்த இந்த விபத்து பற்றி நேற்றுதான் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அரவிந்த் குமாரின் நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com