உ.பி அதிர்ச்சி: குழந்தையை இழுத்துச்சென்று தண்ணீர் தொட்டியில் வீசிய குரங்குகள்

உ.பி அதிர்ச்சி: குழந்தையை இழுத்துச்சென்று தண்ணீர் தொட்டியில் வீசிய குரங்குகள்
உ.பி அதிர்ச்சி: குழந்தையை இழுத்துச்சென்று தண்ணீர் தொட்டியில் வீசிய குரங்குகள்

உத்தரப்பிரதேச மாநிலம் சாந்தி நகரில் குரங்குகள் கூட்டம் இரண்டு மாத கைக்குழந்தையை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி சென்று தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இச்சம்பவத்தில் அந்த குழந்தை உயிரிழந்தது.

இரண்டு மாத கைக்குழந்தையான கேசவ் குமார், மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் தனது பாட்டிக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது கதவு திறந்து கிடந்ததால் குரங்குகள் அறைக்குள் நுழைந்து குழந்தையை வெளியே இழுத்து தூக்கி சென்றன.

குழந்தையை காணவில்லை என்று பாட்டி கண்டறிந்ததும், குடும்பத்தினர் அனைவரும் குழந்தையைத் தேடத் தொடங்கினர். அதன் பின்னர் அக்குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக ஒரு சந்தர்ப்பத்திலும் குரங்குகள் இந்த குழந்தையை தூக்கி செல்ல முயன்றதாகவும், ஆனால் உஷாரான உறவினர்கள் அந்த முயற்சியை முறியடித்ததாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய சாந்திநகர் காவல்துறை அதிகாரி ஓ.பி.சிங் "குரங்குகள் தொல்லை பெரிய பிரச்னையாக உள்ளது, இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com