கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஹனுமன் மிஷ்ரா காலமானார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் இருக்கும் சஞ்ஜய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார் அம்மாநில அமைச்சர் ஹனுமான் மிஷ்ரா. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஹனுமன் மிஷ்ரா இன்று உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 28,211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் அம்மாநில அமைச்சர் ஒருவர் இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.