up cm yogi adityanath rejects maha kumbh river faecal bacteria report
யோகி ஆதித்யநாத், கும்பமேளாஎக்ஸ் தளம்

திரிவேணி சங்கமம் தூய்மை சர்ச்சை | ”குளிக்க மட்டுமல்ல குடிக்கக்கூட செய்யலாம்” - யோகி ஆதித்யநாத்!

“பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்” என உத்தப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Published on

உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் விழா முடிய சில நாட்களே இருக்கும் நிலையில், பக்தர்கள் எண்ணிக்கை தற்போது 56 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது. இன்னும் 7 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

up cm yogi adityanath rejects maha kumbh river faecal bacteria report
யோகி ஆதித்யநாத்எக்ஸ் தளம்

இந்த நிலையில், மகா கும்பமேளா நிகழ்வு குறித்து ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி இருந்தது. திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்தன. பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது.

கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகளால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அத்துடன் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரப் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆணையிட்டது.

up cm yogi adityanath rejects maha kumbh river faecal bacteria report
உ.பி. | திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா.. விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

இதுகுறித்துப் பதிலளித்த உத்தப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்; ஏன் குடிக்கவும் தான்” எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான். ஏன் குடிக்கவும் தான். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம். ஏனெனில் இந்த நிகழ்வு ஒரு கட்சியாலோ அல்லது ஒரு அமைப்பினாலோ ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. இது சமூகத்திற்கானது. அரசு, ஒரு ஊழியராக தனது கடமையை மட்டுமே செய்கிறது. இந்த முறை மகா கும்பமேளாவுக்கு கடமைகளைச் செய்யும் பொறுப்பு, நமக்கு கிடைத்திருக்கிறது.

தவறான பிரசாரங்களை விடுத்து கோடிக்கணக்கான மக்கள் நிகழ்வில் பங்கேற்று இதனை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள். நெரிசலில் பாதிக்கப்பட்ட மற்றும் கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்கும் அரசாங்கம் எல்லா வழிகளிலும் உதவும். ஆனால் இதை அரசியலாக்குகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

up cm yogi adityanath rejects maha kumbh river faecal bacteria report
யோகி ஆதித்யநாத்எக்ஸ் தளம்

முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகா கும்பமேளாவை, ‘மரண கும்பமேளா’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

up cm yogi adityanath rejects maha kumbh river faecal bacteria report
மகா கும்பமேளா விபத்து | யோகி ஆதித்யாத்தைக் கடுமையாகச் சாடிய சங்கராச்சார்யா அவிமுகேஷ்வரானந்த்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com