ரயில்களில் துவைக்காத போர்வைகள்: தணிக்கை குழு திடுக்!

ரயில்களில் துவைக்காத போர்வைகள்: தணிக்கை குழு திடுக்!
ரயில்களில் துவைக்காத போர்வைகள்: தணிக்கை குழு திடுக்!

கடந்த 4 ஆண்டுகளாக துவைக்கப்படாத போர்வைகள் ரயில்வேயில் பயன்படுத்தப்படுவதாக மத்திய தணிக்கைக் குழு கூறியுள்ளது. 

நாடாளுமன்றத்தி‌ல் மத்திய தணிக்கை குழு தாக்கல் செய்த அறிக்கையில், ரயில்வே நிர்வாகம் சுகாதாரத்தை பின்பற்றுவதில்லை என்றும் தட்டுப்பாட்டைப் போக்க போர்வைகளில் இருந்து தலையணைகளுக்கான உறைகள் தைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதே போல சில இடங்களில் போர்வைகள் 4 ஆண்டுகளாகத் துவைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
முன்னதாக, ரயில்களில் வழங்கப்படும் உணவுகள், மனிதர்கள் உண்பதற்கே லாயக்கற்றவை என்று தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com