உன்னாவ் விவகாரம்.. பாதிக்கப்பட்ட பெண் டெல்லி எய்ம்ஸ்-க்கு மாற்றம்..!

உன்னாவ் விவகாரம்.. பாதிக்கப்பட்ட பெண் டெல்லி எய்ம்ஸ்-க்கு மாற்றம்..!
உன்னாவ் விவகாரம்.. பாதிக்கப்பட்ட பெண் டெல்லி எய்ம்ஸ்-க்கு மாற்றம்..!

உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

உன்னாவ் பகுதியில் பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தந்தை சிறையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் கடந்த ஞாயிற்றுகிழமை அந்தப் பெண் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் ஒருவரும் உயிரிழந்தனர். 

அந்தப் பெண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் டெல்லி நீதிமன்றத்தில், இந்த வழக்கை தினசரி விசாரித்து 45 நாட்களுக்குள் முடிக்கவேண்டும். அத்துடன் பெண்ணிற்கு தற்காலிக நிவாரண தொகையாக உத்தரப்பிரதேச அரசு 25 லட்சம் ரூபாயை அளிக்கவேண்டும். அத்துடன் இந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விபத்து ஏற்பட்டு லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பெண் லக்னோவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர் ஆம்பூலன்ஸ் மூலம் இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com