பொறுப்பான சிபிஐ அதிகாரி நேரில் வரவேண்டும் உன்னாவ் வழக்கில் தலைமை நீதிபதி உத்தரவு

பொறுப்பான சிபிஐ அதிகாரி நேரில் வரவேண்டும் உன்னாவ் வழக்கில் தலைமை நீதிபதி உத்தரவு
பொறுப்பான சிபிஐ அதிகாரி நேரில் வரவேண்டும் உன்னாவ் வழக்கில் தலைமை நீதிபதி உத்தரவு

உன்னாவ் பாலியல் வழக்கு தொடர்பான விவரம் குறித்து தெரிவிக்க ஒரு பொறுப்பான சிபிஐ அதிகாரி உச்சநீதிமன்றம் வரவேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார். 

உன்னாவ் பகுதியில் பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் இந்தப் பெண்ணின் தந்தை சிறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் கடந்த ஞாயிற்றுகிழமை இந்தப் பெண் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் ஒருவரும் உயிரிழந்தனர். 

இதனையடுத்து அப்பெண் தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக இம்மாதம் 12ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது தெரியவந்தது. இந்தக் கடிதத்தில், “இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் கொலை முயற்சி நடத்த வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் எங்களை எம்.எல்.ஏ மிரட்டி வருகிறார்”எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் ஏன் இன்னும் அவர் முன் வரவில்லை என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க உச்சநீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பதில் அளிக்க பொறுப்பான சிபிஐ அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு வரவேண்டும். அத்துடன் இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அவர் தெரிவிக்கவேண்டும். மேலும் அரசு வழக்கறிஞர் இந்த பாலியல் வழக்கு மற்றும் அப்பெண்ணின் விபத்து வழக்கு குறித்து சிபிஐயிடம் கேட்க அறிவுறுத்தினார். தேவைப்பட்டால் இந்த வழக்கு நீதிபதிகள் வளாகத்தில் விசாரிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com